1 Comment

  1. மரத்தால் செய்யப்பட்ட கைத்தடி.
    இதன் ஒரு முனையில் கை போன்றும், மற்றொரு முனையில்
    கால் போன்றும் செதுக்கப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளுக்கு முன், கேரளாவில், தீண்டாமை கொடிக்கட்டி
    பறந்தது. அச்சமயத்தில், அங்கு ஆண்ட மன்னர், உயர் ஜாதியைச்
    சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு, தரிசனம் தருவதை வழக்கமாக
    கொண்டிருந்தார்.

    அப்போது, யாராவது மன்னரிடம் கைக் குலுக்க விரும்பினால்,
    மேற்கூறிய கைத்தடியின் கைப் பகுதியை நீட்டுவார். அந்த கட்டை
    கையைப் பிடித்து தான், குலுக்க வேண்டும், அந்த உயர் ஜாதியை
    சேர்ந்த முக்கியஸ்தர்.

    மன்னரின் காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்க நினைத்தால்,
    கைத்தடியின் கால் பகுதியை காட்டுவார். அதைத்தான் தொட்டு
    வணங்க வேண்டும்.

    உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கே இந்த நிலை எனில், மற்ற
    ஜாதியினர், மன்னரின் நிழலைக் கூட நெருங்க முடியாது.

    இத்தகைய, ‘பெருமை’ வாய்ந்த இந்த கைத்தடி, இப்போது, கேரளா,
    பந்தனம்திட்டா அடூரில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில்
    உள்ளது.

    Like

Leave a reply to Venil Cinema Team Cancel reply